newsariyalur@gmail.com

உங்கள் பகுதி முக்கிய செய்திகளை எங்களது ஈமெயில் newsariyalur@gmail.com க்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள். செய்திகள் உடனுக்குடன்...

NEWS IN ARIYALUR

Sunday 19 October 2014

கனமழை புதன்கிழமை வரை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



தமிழகத்தில் பெய்து வரும் கனமழை, புதன் கிழமை வரை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகல் நேரத்தில் பெய்த கனமழை, இரவிலும் தொடர்ந்தது.

வங்கக் கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, புதன் கிழமை வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment