புதுடில்லி: 20.10.2014
காவல்துறையில் 33 சதவீதம் என்ற அளவில் பெண் போலீசாரை அனைத்து மாநிலங்களிலும் தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
புது டில்லியில் இந்திய பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பின் நிறுவன நாள் விழா நேற்று நடந்தது.இவ்விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது.இப்போதைய சூழலில், துணை ராணுவப் படைகளில் 1.99 சதவீதம் மட்டுமே பெண்கள் பணிபுரிகின்றனர்.இந்த அளவினை 10 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அனைத்து மாநிலங்களின் காவல்துறையிலும், மத்திய ஆயுதப்படைப் பிரிவிலும் 33 சதவீதம் அளவில் பெண் போலீசாரை நியமிக்க வேண்டும்.இதுதொடர்பான அறிவிக்கை, மத்திய அரசு மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment